பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூன், 2011


புலி ஆதரவாளர்கள் 400 மில்லியன் அமெ.டொலர் பணத்தை வங்கிகளில் வைப்புச் செய்துள்ளனர்!- திவயின
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை வங்கிகளில் வைப்புச் செய்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
உலகின் முக்கிய ஐந்து நாடுகளின் எட்டு முன்னணி வங்கிகளில் இந்தப் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
கனேடிய காவல்துறையினர் கனடாவில் இயங்கி வந்த நான்கு வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களின் அதிகளவு பணம் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பேணப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
புலி ஆதரவு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த 21 முக்கியஸ்தர்கள் பற்றிய தகவல்களை கனேடிய காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நெதர்லாந்தில் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணைகளின் போதும் வங்கிக் கணக்குகள் பற்றிய விபரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதுtamilwin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக