பக்கங்கள்

பக்கங்கள்

8 செப்., 2012


தண்ணீருக்காக போர் நடக்கும் : அப்துல்கலாம் எச்சரிக்கை

முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான ஏபிஜே அப்துல் கலாம் கேரளாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.



அப்போது அப்துல் கலாம், ’’நாட்டின் முன்னேற்ற நடவடிக்கைகளில் முக்கியமான இடத்தில் நதிகள் இணைப்பு உள்ளது. இந்தியாவில் உள்ள கங்கை, கிருஷ்ணா, பிரம்மபுத்திரா, காவேரி உள்ளிட்ட பெரிய நதிகளை ஒன்றிணைக்க வேண்டும். 

இவ்வாறு இணைத்தால் இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறையே ஏற்படாது. எதிர்காலத்தில் தண்ணீருக் காகத்தான் போர் நடைபெறும்’’ என்று கூறினார்.


மேலும், கல்லூரி மாணவர்களிடையே பேசிய கலாம், இளைஞர்கள் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும். உங்களது பெற்றோர் ஊழலில் ஈடுபடுவது தெரிந்தால் நீங்கள் அவர்களை கேள்வி கேட்க வேண்டும்.

தங்களது பிள்ளைகளே தங்களைக் கேள்வி கேட்பது என்பது மிக மிக மோசமான விஷயம் இல்லையா? அதைவிட மோசமானது அவர்களுக்கு வேறு எதுவும் இல்லை’’ என்று கூறினார்.