பக்கங்கள்

பக்கங்கள்

10 செப்., 2012


பெண்ணொருவருடன் சேஷ்டையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு தருமஅடி: யாழில் சம்பவம்
பெண்ணொருவருடன் தவறான முறையில் நடந்துகொள்ள முயன்ற பொலிஸார் ஒருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று யாழ்ப்பாணம், அராலி கரப்பிட்டி பிள்ளையார் கோவிலடி இரவு 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டைப் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.