பக்கங்கள்

பக்கங்கள்

20 நவ., 2012

கந்தரோடை அம்மன் ஆலயத்தில் மூன்று விக்கிரகங்கள் திருட்டு
கந்தரோடை வற்றாக்கை அம்பாள் ஆலயத்தில் பாதுகாப்பாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பிள்ளையார், அம்பாள், நடேசன் ஆகிய எழுந்தருளி விக்கிரகங்கள் இரவோடிரவாக திருடப்பட்டுள்ளன. 
 

இவ் ஆலயத்தில் அம்பாள் ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. கும்பாபிஷேகம் செய்வதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல இலட்சம் ரூபா செலவில் நடைபெறும் திருப்பணி வேலைகளை முன்னிட்டு மண்டபத்திலிருந்த ஐம்பொன்னினாலான பிள்ளையார், அம்பாள், நடேசன் ஆகிய மூன்று விக்கிரகங்களும் மற்றும் கருங்கல்லினால் செய்யப்பட்ட விக்கிரகங்களும் பாதுகாப்பாக ஓர் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தன.

நள்ளிரவு ஆலயத்திற்குள் புகுந்த திருடர்கள் பாதுகாப்பாக பூட்டிவைக்கப்பட்டிருந்த 10 இலட்சம் பெறுமதியான ஐம்பொன்னால் செய்யப்பட்ட விக்கிரகங்களையும் எடுத்துச் சென்றுள்ளார்கள். இத் திருட்டு தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.