பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2012

அண்மையில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது பல கைதிகள் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.
சிறைச்சாலையில் வன்முறை அடக்கப்பட்ட பின்னர் கணிசமானளவு கைதிகள், சிறப்பு அதிரடிப்படையினரால், படுகொலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இலங்கை இராணுவ கொமாண்டோக்களால் கலவரம் அடக்கப்பட்ட பின்னர், சிறிப்பு அதிரடிப்படையினரால் இவர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கலவரம் முற்றாக முடிவுக்கு வந்த பின்னர் கைதிகள் அனைவரும் சிறைக்கூண்டுகள் சென்றனர். அதன்பின்னர், சிறப்பு அதிரடிப்படையினர் பெயர்ப் பட்டியல் ஒன்றுடன் வந்து அவர்களை வெளியே வருமாறு அழைத்தனர்.
இவ்வாறு வெளியே அழைக்கப்பட்டவர்கள் 11 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
சிறைச்சாலையில் நடைபெற்ற உண்மையான நிலை குறித்த தகவல்கள் வெளியே கசிவதைத் தடுப்பதற்காக தடுக்கும் வகையில் அதிகாரிகள் பலரின் தொலைபேசிகள் ஒட்க் கேட்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அச்ச சூழ்நிலை காரணமாக பல தகவல்கள் வெளியிட அஞ்சுவதாக அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.