பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2012


மத்திய அரசை காப்பாற்றவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்துள்ளனர்: மம்தா தாக்கு
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரளுமன்றத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முயற்சித்தது. 


22.11.2012 காலை மக்களவையில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், மக்களவை சபாநாயகர் மீரா குமார் போதுமான உறுப்பினர்கள் முன்மொழியாத காரணத்தினால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்தார். 
இதனை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மத்திய அரசை காப்பாற்றவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்துள்ளனர் என்று கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.