பக்கங்கள்

பக்கங்கள்

22 டிச., 2012


கல்முனையில் 13 அடி நீளமான முதலை பிரதேச மக்களால் பிடிப்பு
கல்முனை, மருதமுனை பிரதேச கடற்கரையில் இன்று 13 நீளமான முதலை ஒன்று பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக கடலிலிருந்த குறித்த முதலை இன்று கரைக்கு வந்தபோது மக்கள் வலைவீசிப் பிடித்துள்ளனர்.
பிடிபட்டு சில மணி நேரங்களில் இந்த முதலை உயிரிழந்துள்ளது.
இது குறித்து பிரதேசவாசிகள் குறிப்பிடுகையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் அள்ளுண்டு ஆற்றிலிருந்து கடலுக்கு 3 நாட்களுக்கு முன்னர் இந்த முதலை வந்துள்ளது.
இன்று சற்றே மயக்க நிலையில் கரைக்கு வந்தபோது பிரதேசவாசிகளின் முயற்சியினால் வலை வீசி பிடிக்கப்பட்டது.
பிடிபட்டு சில மணி நேரங்களில் உயிரழந்து விட்டது என தெரிவித்தனர்.