பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜன., 2013


காஞ்சீபுரத்துக்குள் ராமதாஸ் நுழைய தடை விதிக்க
வேண்டும்: வக்கீல்கள் மனு


காஞ்சீபுரம் மாவட்ட வக்கீல்கள் ஜனகன், அம்புரோஸ், மாரிமுத்து, பாரதி உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டர் சித்ரசேனை சந்தித்து மனு அளித்தனர். 


அதில்,  ‘’பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் குரு ஆகியோர் அரசியல் லாப நோக்கங் களுக்காக ஜாதி வெறியைத் தூண்டி பொது அமைதியைக் குலைத்து வருகின்றனர்.

அனைத்து சமுதாய பாதுகாப்புப் பேரவை என்ற பெயரில் வெளிப் படையாகவே ஜாதி வெறியைத் தூண்டும் வகையில் பேசி வருகின்றனர்.

எனவே அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, இவர்கள் வருகிற பிப்ரவரி 2-ந்தேதி நடத்தப்போவதாக அறிவித்துள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் வன்கொடுமை சட்ட த்திற்கு எதிரான போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். காஞ்சீபுரத்துக்குள் ராமதாஸ் நுழைய தடை விதிக்க வேண் டும்’’ என்று கூறியுள்ளனர்
.