பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2013


அமைச்சர் டக்ளஸிற்கு திடீர் மாரடைப்பு! யாழ். மருத்துவமனையில் அனுமதி
ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கட்சியின் யாழ். அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு மணியளவில் திடீரென்று ஏற்பட்ட உயர் இரத்த அழுத்தம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இவர் சிசிச்சை பெற்றுள்ளார்.
எனினும், இன்று திங்கட்கிழமை காலை யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து அலுவலகத்திற்கு இவர் சென்று விட்டதாகவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமல் (கமலேந்திரன்) கூறினார்.