பக்கங்கள்

பக்கங்கள்

30 ஏப்., 2013


ஓடும் ரயில் முன் பாய்ந்து தமிழர் ஒருவர் உயிரிழப்பு! கொழும்பு, கொம்பனித்தெருவில் சம்பவம்
ஓடும் ரயிலில் பாய்ந்து தமிழர் ஒருவர் கொழும்பு கொம்பனித் தெருவில் உயிரிழந்துள்ளார்.
கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்றுக் காலை 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து மொரட்டுவ நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலிலேயே இவர் மோதியுள்ளார்.
வத்தளை - ஹெந்தல பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய குமாரசாமி துஷ்யந்த குமார் என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.