பக்கங்கள்

பக்கங்கள்

8 ஏப்., 2013

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பு 7இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இல்லத்திலேயே இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகவும், அச்சந்திப்பில்
சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு அதிகமாக இருவரும் பல்வேறு அரசியல் விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஜனாதிபதி தேர்தல், 2014ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே இந்த இரகசிய சந்திப்பு கடந்தவாரம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தை தோல்வியடையச் செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான நோக்கிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.