பக்கங்கள்

பக்கங்கள்

27 மே, 2013

தமிழ்ச்செல்வனின் மனைவி கிளிநொச்சிக்கு திடீர் விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மனைவியும், மகளும் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவருகிறது.
கிளிநொச்சி  மகாவித்தியாலயத்திற்கு சென்று தங்கள் பிள்ளைகளின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தினைப் பெற்றுக் கொண்டதாகவும், தலைவர் பிரபாகரனால் பிள்ளைகளுக்கு வைக்கப்பட்ட பெயர்களை மாற்ற வேண்டியிருப்பதாக திருமதி தமிழ்ச்செல்வன் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் தாங்கள் நான்கு வருடங்களாக இருண்ட யுகத்திற்குள் இருப்பதாகவும், தனது பிள்ளைகள் நான்கு வருடங்களாகப் பாடசாலையைக் காணவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்ததாக சம்பவத்தினை அவதானித்தவர்கள் தெரிவித்தனர்.
இவருடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நால்வர் சேர்ந்து வந்ததாகவும் நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்.