பக்கங்கள்

பக்கங்கள்

23 மே, 2013

தலைவர் பிரபாகரனை கோழை என தெரிவித்த, அமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக முறைபாட
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக அமைச்சர் வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கைபற்றி முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையானது தமிழ்பேசும் இந்தியர்களுக்கும் தமிழர் அல்லாதோருக்கும் இடையில் பகைமையை தோற்றுவித்தது என, நியாயதுரந்திரர் சி.ரமேஷ் தெற்குவலய பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்றை தொடுத்துள்ளார்.
கடந்த 20ம் திகதி அமைச்சர் நாராயணசாமி விடுத்த அறிக்கையில்,
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் ஒரு கோழை எனவும் அவர் பெண்களையும் சிறுவர்களையும் மனித கேடயமாக பயன்படுத்தினார் என்றும் கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த கூற்றானது பொறுப்பில்லாத ஒன்றாகும் எனவும் இறந்துபோன ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்துவதாகும் என்றும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

நாராயணசாமிக்கு எதிராக இந்திய தண்டனைக் கோவை பிரிவு 153( ஏ) யின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.