பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜூன், 2013

முன்னாள் புலி உறுப்பினர்கள் தூதரகமொன்றில் புகலிடம் கோரியுள்ளனர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மேற்குலக நாடொன்றின் தூதரகமொன்றில் புகலிடம் கோரியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐம்பது முன்னாள் புலி உறுப்பினர்கள் இவ்வாறு புகலிடம் கோரியுள்ளனர். இவர்களில் முன்னாள் பெண் புலிப் போராளிகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புனர்வாழ்வு முகாம் ஒன்றிலிருந்து விடுக்கப்பட்ட புலி உறுப்பினர்களே இவ்வாறு போலியான தகவல்களை வழங்கி குறித்த தூதரகத்தில் அடைக்கலம் கோரியுள்ளனர்.
இவர்களுக்கு அரசியல் புகலிடம் வழங்க சில தமிழ் அரசியல்வாதிகளும் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.