பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2013

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு! யாழ். சங்கானையில் சம்பவம்!
யாழ். சங்கானை முருகமூர்த்தி கோவில் வீதிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
குடும்பஸ்தரான பத்மராசா எனப்படும் குறித்த நபர் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவரது மனைவி நயினாதீவு கோயிலுக்கு சென்ற சமயத்தில் வீட்டில் யாருமற்ற நேரத்திலே தூங்கில் தொங்கியதாக கருதப்படுகின்றது.
விடயம் அறிந்த மானிப்பாய் பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுச் சென்றுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.