பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜூன், 2013

உத்தர்கண்ட்: பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் சவாலான பணியில் பெண் விமானப் பைலட்டுகள்
உத்தர்கண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் பணியில் பெண் விமானப் பைலட்டுகளும் ஈடுபட்டுள்ளனர்.


உத்தர்கண்டில் வெள்ளம் பாதித்து, ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாத இடத்திலும், வானத்தில் ஹெலிகாப்டரை நிலைநிறுத்தி பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் சவாலான பணியில் பெண் விமானிகள் சாதனை படைத்துள்ளனர்.
தனது சீட்டாஹ் ஹெலிகாப்டரில் கேதார்நாத்தில் சுமார் 55 முறை பறந்து ஏராளமானோரை மீட்டள்ளார் குஷ்பு குப்தா என்ற விமானி. மேலும், தான்யா ஸ்ரீனிவாஸ், மிக மோசமான வானிலையிலும் சிறப்பாக செயல்பட்டு பலரை மீட்டுள்ளனர்.