பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2013

சர்வதேச ஊடகங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில்: பீரிஸ்
சர்வதேச ஊடகங்கள் பல தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொதுநலவவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன இதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே பின்னணியில் உள்ளனர். அவர்களால் சர்வதேச ரீதியாக பல ஊடங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
அந்த ஊடங்களும் இலங்கைக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எனினும் இவற்றுக்கு மத்தியிலும் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதாக அனைத்து பொதுநலவாய நாடுகளின் உறுப்பு நாடுகளும் உறுதியளித்திருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.