பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2013

தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும்!- சுதர்சன நாச்சியப்பன் அதிரடி
தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் திடீரென இப்படி அதிரடியாக கூறியிருப்பது காங்கிரசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு அவர் கூறினார்.
தமிழர்களுக்கு சொந்தமான பூமி இலங்கை என்று தெரிவித்த நாச்சியப்பன்,
தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும் என்றார்.
இஸ்ரேல், பாலஸ்தீனம் போன்று தமிழர்களின் பகுதியான இலங்கையை கைப்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழீழக் கனவை நாம் நனவாக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றும் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.