பக்கங்கள்

பக்கங்கள்

14 செப்., 2013

தூக்கில் தொங்கிய நிலையில் மட்டு. மத்திய கல்லூரி மாணவனின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் தரம் 10ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை குறித்த மாணவனின் வீட்டிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மத்திய கல்லூரியின் பின்புற பகுதியில் வசிக்கும் சு.ரவிவர்மன் (14வயது) என்ற மாணவனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.