பக்கங்கள்

பக்கங்கள்

23 செப்., 2013

தீவகத்தில் தோல்வியைத் தாங்கமுடியாது ஈ.பி.டி.பி யினர் அடாவடி! மக்கள் மீது தாக்குதல்
தீவகத்தில் ஈ.பி.டி.பி யினர் தமது தேர்தல் தோல்வியை தாங்க முடியாது மக்களுக்கு பொல்லுத் தடியால் அடித்துள்ளார்கள்.
நடந்து முடிந்த வடமாகாண தேர்தலில், வரலாறு காணாத தேர்தலில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று வெற்றியை பெற்று இருக்கிறது.
இதில் ஈ.பி.டி.பி படுதோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக இவர்களது கோட்டை என்று மார்தட்டிக் கொண்டு திரிந்த தீவகத்தில் தோல்வி அடைந்தது.
இது குறித்து மன விரக்தியில் உள்ள ஈ.பி.டி,பி யினர் புளியங்கூடல், ஊர்காவற்றுறை, வேலணை, தம்பாட்டி, சாட்டி, நாரந்தனை, போன்ற பகுதிகளில் இதுவரைக்கும் கடந்த 3 மணித்தியாலங்களுக்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முன்னின்று உழைத்த 26 பேருக்கு பொல்லுத்தடிகளால் தாக்கியுள்ளனர்.
இதனால் தீவக மக்கள் பெரும் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் இவர்களுக்குப் பயந்து யாழ். நகரில் வாழும் தமது உறவுகளுக்கு அவசரத் தொலைபேசி அழைப்பு விடுத்து ஈ.பி.டி.பி யினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் சிலர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து இருக்கிறார்கள்.
இதுவரை பொலிஸார்  எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் தீவக மக்களை காக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது.