பக்கங்கள்

பக்கங்கள்

25 செப்., 2013

பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ள மாட்டார்!- நாராயணசாமி நம்பிக்கை
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிப்பார் என இந்திய மத்திய இணையமைச்சர் வி. நாராயணசாமி இன்று தெரிவித்தார்.
தமிழ் நாட்டின் எதிர்ப்புகளை கவனத்தில் கொண்டு பிரதமர் இலங்கையில் நடைபெறும் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என நம்புவதாக இந்திய ஊடகங்களிடம் அவர் இன்று குறிப்பிட்டார்.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பான தனது முடிவை பிரதமர் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனவும் அமைச்சர் கூறினார்.