பக்கங்கள்

பக்கங்கள்

21 அக்., 2013

ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக வழக்கு: நாஞ்சில் சம்பத் விடுதலை
கடந்த 2002ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் நடந்த மதிமுக., கூட்டத்தில், அப்போது அந்த கட்சியில் இருந்த நாஞ்சில் சம்பத், முதல்வர் ஜெயலலிதாவை
அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு புதுக்கோட்டை ஜே.எம். கோர்ட்டில் நடந்து வந்தது. தற்போது சம்பத் அதிமுக கட்சியில் இருக்கிறார். இந்நிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அதில் நாஞ்சில் சம்பத்தை அவதூறு வழக்கில் இருந்து நீதிபதிகள் விடுவித்து உத்தரவு பிறப்பித்தனர்.