பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2013

ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர் இந்திரராசா முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்
சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளாமல் இருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.)  உறுப்பினர் இராமநாதர் இந்திரராசா, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியினைச் சேர்ந்த இவர் வவுனியாவில் தமது கட்சி அங்கத்தவர்கள் மூவர் சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளும் போது, தான் முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் மேற்கொள்வதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வலி.மேற்கு சங்கானைப் பிரதேச சபை கட்டிடத் தொகுதித் திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று வருகை தந்திருந்தார்.
இதன்போதே அவர் முன்னிலையில் இந்திரராசா சத்தியப் பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் திறப்பு விழா நிகழ்விற்கு வருகை தந்திருந்த போதிலும், ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர் இராமநாதர் இந்திரராசா சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளும் இடத்தில் அவர் இருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும்.