பக்கங்கள்

பக்கங்கள்

13 நவ., 2013

கமரூனின் பாதுகாப்பு குறித்து உறுதி செய்து கொள்ள பாதுகாப்பு செயலக குழுவினர் யாழ்.விஜயம்
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரவுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
யாழ். விஜயத்துக்கான முன்னேற்பாடாக கமரூனின் பாதுகாப்பு செயலக குழுவினர் இன்று புதன்கிழமை வடக்குக்குச் சென்று அங்கு பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் உறுதி செய்து வருகின்றனர்.
அக்குழுவினர், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ். பொது நூலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது வடக்கின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.