பக்கங்கள்

பக்கங்கள்

14 நவ., 2013

 பாஜகவுடன் பாமக கூட்டணி
 


வரும் நாடாளுமன்றத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிடுவோம் என கடந்த இரண்டு ஆண்டுகளாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் கூறிவந்தனர்.



இந்நிலையில் ராமதாஸ்,  அனைத்து சமுதாய பேரியக்கம்‘  கூட்டமைப்பின் சார்பில்,  தமிழகம் முழுவதும் 40 தொகுதிகளிலும் போட்டியிடு தற்காக மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
அதே நேரத்தில் பாமக போட்டியிடும் தொகுதிகள் மட்டும் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டது.  இந்த சூழ்நிலையில், பாமக பாஜகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.   அதில், தலைமை யின் கீழ் உள்ள அந்த அமைப்பு கூட்டணி வைப்பது போலவும், பேசி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டணியில் மதிமுகவும் இடம்பெறும் என பாமக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.  அதோடு, யாருக்கு எந்த தொகுதி  என்ற பேச்சுவார்த்தையும் நடப்பதாக கூறப்படுகிறது.