பக்கங்கள்

பக்கங்கள்

17 நவ., 2013


சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது: மத்திய அரசு முடிவு
கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் புரிந்த சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய விளையாட்டுத்துறை
அமைச்சகம் விருது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விளையாட்டு வீரருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதேபோல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்.க்கும் பாரத ரத்னா விருது அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அறிவியல் துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்ததற்காக விஞ்ஞானி ராவ்.க்கு இந்த விருது வழங்கப்படுகிறது.