பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜன., 2014

மன்னார் புதைகுழியிலிருந்து இதுவரை 44 எலும்புக் கூடுகள் மீட்பு 
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழியிலிருந்து இன்றும் ஒரு மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மன்னார் நீதவான் ஆனந்தி
கனகரட்ணத்தின் மற்றும்அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரட்ன ஆகியோர் முன்னிலையில் மனித புதை குழி இன்று தோண்டப்பட்டது. அதிலிருந்து ஒரு  மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே மீட்கப்பட்ட 43 எலும்புக் கூடுகளுடன் சேர்த்து இதுவரை 44 எலும்புக் கூடுகள் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.