பக்கங்கள்

பக்கங்கள்

15 பிப்., 2014

தமிழ்ப் பெண்கள் 15 பேரை சிங்கள இராணுவம் கதறக் கதறக் பாலியல் பலாத்காரம் 
சனல் 4ல் விரைவில் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சி வெளியீடு!- வைகோ தகவல்

தமிழினப் படுகொலைக்கு புதியதோர் ஆதாரத்தை சனல்-4 விரைவில் வெளியாகக்கூடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2009 ல் போரின் உச்ச கட்டத்தின் போது, சிங்கள இராணுவத்தினர் ஈழத் தமிழ்ப் பெண்களை வதைத்துக் கொன்ற காட்சி புதிய ஆதாரமாகக் கிடைத்துள்ளது.
அந்தக் கொடுமையை எழுத்தில் பதிய என் மனம் மறுக்கிறது.
ஐயோ! இப்படியும் ஒரு கொடுமையா? என்று புலம்பி தவிக்கிறது.
தமிழ்ப் பெண்கள் 15 பேரை சிங்கள இராணுவம் கதறக் கதறக் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் படுகொலை செய்து, சிதைந்துபோன அப்பெண்களின் உடல்களை உணவின்றியும், மருந்தின்றியும், குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் பதறித் துடித்துக் கொண்டிருந்த தமிழ் மக்கள் முன்னால் மண்ணில் வீசுகிறது.
அத்துடன் முடியவில்லை கொடுமை. மனிதகுலத்தின் கர்ப்பக்கிரகமான பெண்ணின் கருவறையான உடல் பகுதியில் துப்பாக்கிகளைக் கொண்டு நாசப்படுத்தும் அக்கிரமம் மிருகங்கள் கூட செய்யத் துணியாதது.
இந்தக் கொடிய சம்பவம் காணொளியாக சனல்-4 ல் விரைவில் வெளியாகக்கூடும்.
எனவே, இலங்கைத் தீவில் சிங்கள அரசு நடத்தியது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை என்ற உண்மையை உலக நாடுகள் உணர வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.