பக்கங்கள்

பக்கங்கள்

15 பிப்., 2014


ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி சட்டசபையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறியபடி, அவரது அமைச்சரவை இன்று இரவு கூடி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது
என முடிவெடுத்தது. அதன்படி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரை சந்தித்து அவர் அளித்தார்.

முன்னதாக தங்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் முன்னிலையில் அவர் பேசும்போது, ஜன் லோக்பால் மசோதாவை ஆதரிக்காமல் காங்கிரசும், பா.ஜனதாவும் எதிர்த்து வருகின்றன. எரிவாயு விலை நிர்ணயம் விவகாரத்தில் ரிலையன்ஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதால் காங்கிரசும், பா.ஜனதாவும் நெருக்கடி தந்ததுடன், ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய விடாமல் தடுக்கின்றன. இந்த மசோதாவிற்காக தெருவில் இறங்கி போராடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நமது அரசைக் காப்பாற்றுவதற்காக வரவில்லை. ஆனால், ஊழலில் இருந்து நாட்டைக் காப்பாற்றவே வந்துள்ளோம். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் குடிநீர் மற்றும் மின்சார கட்டணங்களை குறைத்து ள்ளோம். ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றி ஊழலை ஒழிக்கும் முயற்சிக்ககாக 1000 முறை கூட முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என தெரிவித்தார்.