பக்கங்கள்

பக்கங்கள்

20 பிப்., 2014

வடக்கு அபிவிருத்தி குறித்து ஐ.நா. பிரதிநிதிகள் ஆளுநருடன் பேச்சு 
ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய அரசியல் விவகாரங்களுக்கான இயக்குனர் மேரி ஜமசிற்றா உள்ளிட்ட மூன்று பேர் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு
விஜயம் மேற்கொண்டு வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்.

இன்று காலை 9 .30 மணியளவில் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இக் கலந்துரையாடலில்,

கடந்த காலங்களில் வடக்கில் இடம்பெற்ற அபிவிருத்தி பணிகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் வடக்கில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள அபிவிருத்தி பணிகளுக்கு தாம் வழங்கவேண்டிய ஒத்துழைப்புக்கள் பற்றியும் கலந்துரையாடினர்.