பக்கங்கள்

பக்கங்கள்

22 ஏப்., 2014


பிரான்ஸ் சென்றிருந்த இலங்கையர் ஒருவர் இறந்த நிலையில் ஹோட்டல் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையின் கட்டுநேரிய பிரதேசத்தை 47 வயதான சுதேஷ் சந்தன பெரேரா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இத்தாலியில் இருந்து இவர் குடும்பத்தினருடன் பிரான்ஸ் லூர்த்து மாத ஆலயத்திற்கு யாத்திரை சென்றிருந்தார். இவருடன் மனைவி, உறவினர்கள் மற்றும் வேறு சில இலங்கையர்களுடன் அவர் பிரான்ஸ் சென்றிருந்தார்.
இலங்கை பிரஜையின் மரணத்திற்கான காரணம் அறிய பிரான்ஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.