பக்கங்கள்

பக்கங்கள்

9 மே, 2014


+2 தேர்வு முடிவு: 1193 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்த ஊத்தங்கரை மாணவி சுஷாந்தி
 

+2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியாகின. 
கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுஷாந்தி, 1193 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தார். 


தருமபுரி ஸ்ரீவிஜய் வித்யா மந்திர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி அலமேலு, 1192 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்தார். 
நாமக்கல் போதுபட்டி கிரீன்பார்க் பள்ளியைச் சேர்ந்த துளசி ராஜன் 1191 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளார். சென்னை மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியைச் சேர்ந்த நித்யா என்ற மாணவியும் 3ம் இடத்தை பிடித்துள்ளார்.