பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2014

news
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும்   தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரால் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள வீரமகா காளி அம்மன் கோயிலில் இன்று மாலை 5.45  மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.


இதில் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன் மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம், மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், சுகிர்தன், பரஞ்சோதி, சிவாஜிலிங்கம் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் , பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை நிகழ்வைத் தடுக்கவென இராணுவத்தினராலும் புலனாய்வாளர்களாலும் அனுப்பப்பட்ட சிலர் கோயில் வளாகத்திற்குள் வந்து நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

எனினும் அதனையும் மீறி ஆலய வளாகத்திற்குள் நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது வீரமகா காளி அம்மன் ஆலயத்திலும் நினைவேந்தல்