பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2014

வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை விரைவில் 
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய திறைசேரியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த ஒப்பந்தமானது  பி.ஓ.ரி. எனப்படும் நிர்மாணம்-நடைமுறை-மாற்றல் என்ற அடிப்படையின் கீழ் கைச்சாத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
ஒப்பந்தத்தின் மூலம் கொழும்பு-வடபகுதி நெடுஞ்சாலையுடன்  மலைநாட்டுடனான நெடுஞ்சாலையும் இணைக்கபடவுள்ளதாக தெரியவருகின்றது.
 
இதேவேளை இலங்கையின் வறுமை மேலும் 6 சதவீதத்தினால் குறைக்கப்டடுள்ளதாகவும் திறைசேரியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.