பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூன், 2014

உலகக்கிண்ண கிரிக்கெட் 2015: களைகட்டிய இந்தியா- பாகிஸ்தான் டிக்கெட் விற்பனை 
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.


கிரிக்கெட் தொடரில் இந்தியாஇ பாகிஸ்தான் அணிகள் என்றாலே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

2015ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் அடிலெய்ஸ்டு ஓவல் மைதானத்தில் பெப்ரவரி 15ம் திகதியன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்தப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் விற்றுவிட்டதாக போட்டி நிர்வாகிகளில் ஒருவரான ஜான் ஹார்ன்டென் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் அவுஸ்திரேலியாவில் பல்வேறு மக்கள் வசிக்கின்றனர்.

இவ்விரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போட்டிகள் இறுதிப்போட்டிகளை போல் இருப்பதால் அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்து விட்டது என்று கூறியுள்ளார்.