பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூன், 2014


மூழ்கிக் கொண்டிருக்கும் அகதிப் படகு பற்றி தமிழ்ப்பெண் தகவல்- உறுதிப்படுத்த மறுக்கும் அவுஸ்திரேலிய அரசு
கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் அடங்கிய படகொன்று தத்தளிப்பதாக தகவல் வெளியான போதிலும், மத்திய அரசாங்கம் ஊர்ஜிதம் செய்ய மறுத்திருக்கிறது.
இந்தப் படகிலுள்ளதாகக் கூறப்படும் 153 பேரில் இருவரிடம் பேசியதாக Fairfax ஊடக நிறுவனம் அறிவித்துள்ளது.
இவர்களில் ஒருவர் தமிழ்ப் பெண்ணாக இனங்காணப்பட்டுள்ளார். தாம் வந்த படகு ஜூன் 13ஆம் திகதி தென்னிந்தியாவில் இருந்து புறப்பட்டதாக அவர் கூறினார்.
இது பற்றி குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் பேச்சாளர் கருத்து வெளியிடுகையில், கடலில் உயிர்ப் பாதுகாப்பிற்கு தீவிர அச்சுறுத்தலாக அமையக்கூடிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளையே அரசாங்கம் ஊர்ஜிதம் செய்யுமெனத் தெரிவித்தார்.
நீர்க்கசிவு ஏற்பட்டுள்ள படகு பற்றி அரசாங்கத்திடம் தகவல் எதுவுமில்லையென அவர் கூறினார்.