பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2014



மாநிலங்களவை உறுப்பினராக திருச்சி சிவா பதவியேற்பு
மாநிலங்களவை உறுப்பினராக திருச்சி சிவா, இன்று (திங்கள்கிழமை) பதவியேற்றுக்கொண்டார்.


குடியரசுத் தலைவர் உரைக்குப் பின்னர் மாநிலங்களவை கூடியதும், திமுக உறுப்பினர் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.