பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜூன், 2014


)

 முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் வாகனம் நிறுத்துமிடப்பணி அமைப்பது பற்றி அறிக்கை தர கேரளா அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக  கேரள அரசுக்கு, தமிழக அரசு இன்று எழுதியுள்ள கடிதத்தில், வாகன நிறுத்துமிடப் பகுதிக்கு ஆண்டு தோறும் குத்தகை வரி செலுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.


வாகன நிறுத்துமிடப் பணி குறித்து இரு மாநில அரசுகளும் கூட்டாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதனிடையே, தமிழக அரசின் கடிதத்தை பெரியாறு புலிகள் காப்பக இயக்குநருக்கு அனுப்பியுள்ள கேரளா அரசு, இது தொடர்பாக அறிக்கை அளிக்க காப்பக இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளது.