பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூலை, 2014

சுவிஸ் சூரிச் மாநிலத்தில் சிவன் ஆலய தேர்த் திருவிழாவில் பல்லாயிரம் மக்கள்
சுவிட்சலாந்தின் சூரிச் மாநிலத்தில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள் மிகு சிவன் ஆலய தேர்த் திருவிழா சனி (05.07.2014) அன்று வெகு சிறப்பாக இடம் பெற்றதுடன் வழமைக்கு மாறாக பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத் தக்கது.
தாயகத்தின் தன்மையினை ஒத்த வகையில் அமைந்திருந்த இச் சிறப்புத் தேர்த்
திருவிழாவில் காவடி மற்றும் பல சிறப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் இதில் கலந்து கொண்ட பக்தர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பல்லாயிரம் பக்தர்கள் எம் பெருமான் சிவனின் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டமை எமக்கு எம் தாய் மண்ணில் இருப்பது போன்ற உணர்வு உள்ளதாக தெரிவித்த அவர் தான் ஜெனிவா மாநிலத்திலிருந்து வந்ததாகவும் இது போன்று பல மாநிலங்களிலும் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளர் என்று குறிப்பிட்டார்...