பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜூலை, 2014


கிளஸ்கோவில் இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாட்டாளர்கள் அனுமதி
ஸ்கொட்லான்ட், கிளஸ்கோ நகரில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுக்களின் போது மைதானத்துக்கு வெளியே தமிழ் குழுக்கள் இலங்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்த ஏற்பாட்டாளர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
கிளாஸ்கோ 2014இன் நிறைவேற்று பொறுப்பாளர் டேவிட் கிரிவெம்பேக்கின் தகவல்படி தமிழ் குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு தாம் அனுமதியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விளையாட்டு நிகழ்வின்போது பாதுகாப்பு பிரச்சினைகளை காரணம் காட்டி பொதுநலவாய நாடுகளின் தவிசாளரான இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அந்த நிகழ்வை புறக்கணித்துள்ளார்.