பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூலை, 2014




களுத்துறை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் ஆணுறுப்பினை வெட்டி கடலில் வீசி எறிந்துள்ளார்.
20 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு களுத்துறை பிரதேச கடலில் தனது ஆணுறுப்பை தாமே வெட்டி வீசி எறிந்துள்ளார்.

காயமடைந்த இளைஞர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட ஆண் உறுப்பை மீளவும் பொருத்தும் நோக்கில் அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உறுப்புக்கள் உணர்வற்றுப் போகக் கூடிய மருந்து ஒன்றை ஆண் உறுப்பில் தடவி, அதன் பின்னர் உறுப்பு வெட்டி வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
என்ன காரணத்திற்காக இவ்வாறு இளைஞர் தனது சொந்த உறுப்பினை வெட்டி வீசினார் என்பது தெரியவரவில்லை.