பக்கங்கள்

பக்கங்கள்

8 செப்., 2014


ஐ.நா விசாரணை குழுவை இந்தியாவுக்குள் அனுமதிக்கவும்! வைகோ தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழுவை இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
சென்னையில் இந்த ஆர்ப்பாட்டம் நாளை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் வை.கோபாலசுவாமி தலைமை தாங்கவுள்ளார்.
இலங்கைக்கு எதிராக விசாரணையை மேற்கொள்ளும் சர்வதேச விசாரணைக்குழு, இந்தியாவில் தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொள்ள இந்தியா அனுமதிக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையில் மஹிந்த ராஜபக்சவை உரையாற்ற அனுமதிக்கக்கூடாது.
இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.
தனியான தமிழீழம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைக்கப்படவுள்ளன.