பக்கங்கள்

பக்கங்கள்

17 நவ., 2014

வீழ்ச்சியடைந்து வரும் மகிந்தவுக்கான மக்கள் ஆதரவு
ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டு அரச திணைக்களம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கான மக்கள் ஆதரவு 54 வீதத்தில் இருந்து 47 வீதமாக படுவேகமாக குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கு இருந்த மக்கள் ஆதரவு 7 வீதமாக குறைந்துள்ளமையானது அரசாங்கத்தின் விசேட கவனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத பின்னணியில் ஜனாதிபதிக்கான மக்கள் ஆதரவு குறைந்துள்ளமை சிக்கலுக்குரியது என கருத்து கணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை அறிவித்தால் ஜனாதிபதிக்கான மக்களின் ஆதரவு மேலும் வீழ்ச்சியடையலாம் எனவும் இதனால், ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றி அவதானக்கு உள்ளாகலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.