பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2014

மாகாண சபைகளில் வீழ்ச்சி ஆரம்பம்: வடமத்திய மாகாண அமைச்சர் பதவி நீக்கப்பட்டார்
வடமத்திய மாகாண கூட்டுறவு வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பேஷல பண்டார ஜயரத்ன அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாகாண சபைகளில் பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சி இரு கூறுகளாக பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
வடமத்திய, வடமேல் உள்ளிட்ட நான்கு மாகாணங்கள் ஆளும் கட்சியின் பிடியை விட்டுச் செல்லக் கூடும் என நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தன.