பக்கங்கள்

பக்கங்கள்

20 டிச., 2014

சிறீதரன் எம்பியின் கொடும்பாவியை எரித்து யாழில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஈபிடிபியினர
யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக ஈ.பி.டி.பி கட்சியினர் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை நடத்தியுள்ளனர்.
இந்தப் பேரணியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கொடும்பாவியும் ஈபிடிபியினரால் எரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16ம் திகதி யாழ்.மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற தாக்குதலுக்கு கூட்டமைப்பினரே காரணமெனவும் அவர்களைக் கைது செய்யுமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிரான கோசங்களை எழுப்பியதுடன், பொலிசாரிடம் மகஜரையும் கையளித்துள்ளனர்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஈபிடிபினரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே.