பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜன., 2015

ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் தேர்தலில் போட்டியிட தடை! பிரதான கட்சிகள் தீர்மானம்


ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
குறிப்பிட்ட ஒரு நபருக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு இருந்தால் அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலீடாக படித்த, மதிநுட்பமானவர்களை தேர்தலில் களமிறக்குவது என பிரதான கட்சிகள் தீர்மானித்துள்ளன.
எதிர்வரும் காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபட முடியாத வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.
தற்போது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணை நடாத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரதேச சபை உறுப்பினர்கள் முதல் அமைச்சரவை அமைச்சர்கள் வரையில் சகல அரசியல்வாதிகளுக்கும் ஒழுக்கக் கோவையொன்று உருவாக்கப்பட உள்ளது.