பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2015

விமல் வீரவன்ஸவின் மனைவியின் கடவுச் சீட்டு தொடர்பில் விசாரணை


முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவின் கடவுச்சீட்டு தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொய்யான தகவல்களை வழங்கி இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டதாக அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சஷி வீரவன்ச 2010ஆம் ஆண்டு, பொய்யான தகவல்களை கொண்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், 2009ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி காலாவதியான அவரது சாதாரண கடவுச்சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அதில் அடங்கியுள்ள தகவல்கள் வித்தியாசப்படுவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.