பக்கங்கள்

பக்கங்கள்

27 பிப்., 2015

உலகக்கிண்ண இலங்கை அணியில் உப்புல் தரங்க இணைவு

நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட இலங்கை அணி வீரர் உப்புல் தரங்கவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது இலங்கை சார்பில் உலகக்கிண்ண போட்டியில் பங்கு பெற்றுள்ள ஜீவன் மென்டிஸ் காயமடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக உப்புல் தரங்க அணியுடன் இணையவுள்ளார்.

உப்புல் தரங்க அவுஸ்திரேலியா செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜீவன்  மென்டிஸ் குணமடைய காலதாமதம் எடுக்கும் என வைத்தியர் அறிவித்துள்ளதை அடுத்தே உப்புல் தரங்க அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.இவர் ஆப்கானிஸ் தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திசர பெரேராவுடன் இணைந்து வெற்றிக்கு வித்திட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
.