பக்கங்கள்

பக்கங்கள்

16 பிப்., 2015

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா வெற்றி


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி ஜிம்பாப்வே அணியுடன் மோதியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த தெனாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக மில்லர் 138 ரன்கள் எடுத்தார்.
340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 277 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 62 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.