பக்கங்கள்

பக்கங்கள்

27 ஏப்., 2015

நீதிபதி தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த கூலித் தொழிலாளியின் மகள்

நாமக்கல்லைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மகள் சிவில் நீதிபதி தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ், ஜெய்சூரியா தம்பதியர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இவரது மகள் விபிசி (25) அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு முடித்து விட்டு, திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் இளநிலை சட்டம் படித்துள்ளார்.
இதையடுத்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் அவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சிவில் நீதிபதிக்கான தேர்வை எழுதியுள்ளார்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 6172 பேர் எழுதிய இந்த தேர்வில், 590 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்றவர்களிடம் நேர்முக தேர்வு, சான்று சரிபார்த்தல் ஆகியவற்ற்உக்கு பின் அடுத்த சுற்றுக்கு 314 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் விபிசி 323.75 மதிப்பெண் பெற்று, தமிழக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும், விபிசி இது குறித்து கூறுகையில், தனது வெற்றிக்கு பெற்றோரும், பயிற்சியாளர்களும், ஊக்குவித்த வழக்கறிஞருமே காரணம் என்று தெரிவித்துள்ளார்.